Thursday, May 31, 2018

குழந்தைகளுக்கு எத்தனை மாதம் வரைக்கும் தாய்பால் அவசியம் தெரியுமா..


குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதைவரை அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம். குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். 

குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் காலம்வரை தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும். ஏனெனில் குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான். 

அத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர வளர நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மூலதாரமாக உள்ளது. எனவே தாய்மார்கள் தவறாமல் குறைந்தது 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு சுவாசக்குழாயில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். குழந்தையின் சுவாசக்குழாயானது மிகவும் மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன் மற்ற உணவுப் பொருட்களை கொடுப்பதால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 

ஊட்டச்சத்துக்கள் நிரைந்த தாய்ப்பால் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்....!


முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

தலை முடி செழித்து வளர வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும், இவ்வாறு செய்துவந்தால் பலன் தரும்.

சருமம் நிறம் அதிகரிக்க ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன், பால்பவுடர் அரை டீஸ்பூன், பார்லி பவுடர் அரை டீஸ்பூன் மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் மின்னல் போல மின்னும்.

கண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவுதல் வேண்டும். கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.

மருதாணி நன்கு சிவக்க மருதாணி போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்.

காலை எழுந்தவுடன் வெந்நீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்


தினமும் காலை எழுந்தவுடன் வெந்நீர் குடித்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

பெரும்பாலும் வெந்நீர் மழை காலம், குளிர் காலம் அல்லது காய்ச்சல் போன்ற நேரங்களில்தான் எடுத்துக்கொள்வோம். மற்ற நேரங்களில் ஐஸ் தண்ணீர்தான். ஆனால் தினமும் காலை வெந்நீர் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுவலி, இதய துடிப்பு திடீரென அதிகரிப்பு, கொழுப்பு அளவு அதிகரிப்பு, இருமல், உடல்வலி, ஆஸ்துமா, நரம்பு தடிப்பு நோய்கள், வயிற்றுக் கோளாறு, பசியின்மை ஆகியவைக்கு தீர்வாக அமைகிறது.

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் வெந்நீர் பருக வேண்டும். வெந்நீர் குடித்தப்பின் 45 நிமிடங்கள் கழித்துதான் வேறு எதுவாக இருந்தாலும் உண்ணவோ குடிக்கவோ வேண்டும். இந்த இடைவெளி மிக அவசியம்.

வாய்ப்புண் ஏன் வருகிறது? அதற்கான இயற்கை மருத்துவம்...!

Image result for வாய்ப்புண்

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். 

நாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும். 

வாய்ப்புண் காரணங்கள்:

ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் பேக்டீரியா, புஞ்சனம், வைரஸ் இவற்றாலும் உண்டாகிறது. வைட்டமின் ‘பி’ சத்துக் குறைவாலும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது. சிக்ரெட், பீடி புகைக்கும் பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும். வாய்ப்புண்கள் தொடர்ந்து நீண்ட நாட்கள் காணப்பட்டால் புற்று நோயாக மாறவும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும் வாயில் துர்நாற்ற்றம் ஏற்படும்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு, இந்த தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால், வாய்ப்புண் வருகிறது.

தடுக்கும் வழிமுறைகள்:

ஜீரணக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடல் குளிர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக பராமரிக்கவேண்டும். மனஅழுத்தம் ஏற்படாதவாறு தியானம், யோகா பயிற்சிகளை செய்யவேண்டும்.

நெல்லிக்காய் இலைகளை வேகவைத்த நீரில், அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்க்கொப்பளிக்க புண் ஆறும். 

மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிதுநேரம் வாயிலே வைத்திருந்து விழுங்கலாம். முற்றின அதாவது கொப்பரை தேங்காயையும் பயன்படுத்தலாம். பாலில் சிறிது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவி வர நல்ல பலன்கிடைக்கும்.

சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...!

Image result for சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...!

சில காய்களை பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. குறிப்பாக இவைகள் சாமைத்து சாப்பிடுவதை விடவும் அப்படியே சாப்பிடுவதால் முழு சத்துகளையும் பெற்று ஆரோக்கியமாக வாழ துணை புரிகிறது. முள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதை விடவும் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்க செய்கிறது. சக்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள அல்லிசின் என்னும் கலவை டி.என்.ஏ-வைப் பாதுகாக்கும். முட்டைக்கோஸ் மற்றும் பசலைக்கீரையில் வைட்டமின் கே, சி மற்றும் இரும்பு சச்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைவதற்கும் உடல் உலிமை பெறும். இது உதவுகிறது. வேக வைத்து சாப்பிடுவதை விட இதை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

நம் உடலின் இரத்ததின் அளவை அதிகரிக்க செய்வதில் பீட்ரூட் முக்கிய பங்காற்றுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கிய காய்களில் இதுவும் ஒன்றாகும்.

தினமும் சிறிது தேங்காய் துண்டை பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்களை கரைத்து குறைத்து, மூளை மற்றும் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

கேரட்டில் வைட்டமின் ஏ, நிறைத்துள்ள கேரட் கண்பார்வைக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது.

தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடிய சக்தி தக்காளிக்கு உள்ளது. உடலின் கொழுப்பை கூட குறைத்துவிடும்.

தினமும் முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் உடல் வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம்.

Monday, May 28, 2018

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பீட்ரூட்.....!


பீட்ரூட்டை ஆண்கள் சாப்பிடுவதால், பாலியல் பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு இணையாக பீட்ரூட் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது.

பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது. பீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த நாளங்களை விரியச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

ஆண்கள் தொடர்ந்து பீட்ரூட் சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் முழுவதும், குறிப்பாக பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கி, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.

தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பீட்ரூட்டை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அதனை துண்டுகளாக்கி, வேக வைத்து, பின் அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து உட்கொண்டு வர, உடலில் நைட்ரேட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு, இரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்.

பீட்ரூட்டை ஜூஸ் செய்து குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பீட்-ருட் ஜூஸ் செய்வதற்கு 2 சிறிய பீட்ரூட்டை எடுத்து, நன்கு கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும்.

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்!


தினமும் சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் 

உடல் சமநிலைக்கு வந்துடும். சின்ன வெங்காயத்தை பொடி போன்று நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்துசாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர நல்ல பலன் தரும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக்குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்....!



சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்கும் அற்புத மருந்து கடுக்காய்.

பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. 

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

சரும பராமரிப்பில் பலன்தரும் கஸ்தூரி மஞ்சள்!


கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. 

கஸ்தூரி மஞ்சள் மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும். சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் தடுக்கும்.

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நன்மைகள் தெரியுமா...!

Image result for பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நன்மைகள் தெரியுமா...!

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும். மேலும் அது இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிக சிறந்தது.

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும். இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.
பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8-லிருந்து 12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின், அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட, ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்.

பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

பருக்களினால் ஏற்படக்கூடிய தழும்பகளை குணமாக்கும் இயற்கை வைத்தியம்

Image result for பருக்களினால்


முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதனை போக்குவதற்கு இயற்கையில் கிடைக்கும் பொருள்களை கொண்டு தீர்வு காணலாம். 

  • வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கற்றாழை ஜெல்லை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
  • கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்கும்.
  • ஒரு உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்து முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி, காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.
  • ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.
  • சிறிது வெந்தயக்கீரை இலைகளை மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.

Monday, May 21, 2018

நிபா வைரஸ் எப்படி பரவுகிறது..? அறிகுறிகள் என்ன தெரியுமா..?

Image result for நிபா வைரஸ்

நிபா வைரஸ்: 


1998 - 99-ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தில் காய்ச்சலால் மக்கள் தொடர்ச்சியாக உயிரிழந்தனர். அவர்களின் ரத்தத்தைச் சோதனை செய்து பார்த்தபோதுதான், இந்த வைரஸ் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 

எங்கு உற்பத்தியாகிறது: 

* பழந்தின்னி வெளவால்களின் சிறுநீரகம், உமிழ்நீர், முகம் ஆகிய இடங்களில் இந்த வைரஸ் உற்பத்தியாகிறது.

* இந்த வெளவால்கள் கடித்த பழங்களை பிற விலங்குகள் உண்ணும்போதும், அவற்றின் சிறுநீர், உமிழ்நீர் விலங்குகளின் மீது படுவதன் மூலமும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

* நிபா வைரஸ் பன்றி, பூனை, நாய், குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கு பரவியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

* இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் மனிதர்கள் பழகும்போது அவர்களுக்கும் நிபா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்: 

* நிபா வைரஸ் 5 முதல் 14 நாள்கள் உடலில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

* காய்ச்சல், தலைவலி, சோர்வு, தன்னிலையிழத்தல், மனக்குழப்பம் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும்.

* நோய் தீவிரமடையும்போது நோயாளிகள் சுயநினைவை இழப்பர்.

* அதைத்தொடர்ந்து அவர்களது நரம்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலம் ஆகியவை பாதிக்கப்பட்டு உயிரிழப்பர்.

சிகிச்சைகள் என்ன?:
* நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சிறுநீர், உமிழ்நீர், வியர்வை உள்ளிட்டவற்றின் மாதிரிகளைப் பரிசோதிப்பதன் மூலம் பாதிப்பைக் கண்டறிய முடியும்.

* மாதிரிகளை புணே, மணிபால் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வுக்கூடங்களில் பரிசோதிக்க முடியும்.

* டெங்கு காய்ச்சலைப் போன்றே இந்த வைரஸ் பாதிப்புக்கும் பிரத்யேக சிகிச்சை முறைகள் கிடையாது.

* இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான தடுப்பு மருந்துகள், தடுப்பூசியும் கிடையாது. எனினும் அறிகுறிகளுக்கு அளிக்கப்படும் ஆதரவு சிகிச்சைகள் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.

பாதுகாத்துக் கொள்வது எப்படி?

* நோய்வாய்ப்பட்ட பன்றிகள் இருக்கும் பகுதிகளில் புழங்கக் கூடாது.

* காய்கறிகள், பழங்களை நன்கு தண்ணீரில் கழுவிய பின்புதான் உட்கொள்ள வேண்டும்.

* வெளவால் உள்ளிட்ட பறவைகள் கொத்திய பழங்களைச் சாப்பிடக் கூடாது.

* காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

* சுய மருத்துவம் கூடாது என்பதே சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்.

Sunday, May 20, 2018

நன்மைகள் பல தரும் நுங்கு



மறைந்து வரும் பராம்பரியங்களில் பனைமரமும் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டின் மாநில மரம்மாக இருக்கும் இம்மரத்தை இத்தலைமுறையினர் அறிந்திருக்கவாய்ப்பில்லை.அறியாமல் இருந்தாலும் அதில் இருந்து கிடைக்கும் நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது.

வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.

பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
  • நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.
  • நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே. மேலும் நுங்கை சாப்பிட்டடன் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • உடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்தசோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து.
  • நுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது நுங்கு.

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்



1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பின்பு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

கீரைகளும் அதன் பயன்களும்


கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.

வெந்தயக்கீரை:

உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது.

முருங்கை கீரை:

உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கும். ரத்தசோகையை குறைக்கும்.

அரைக்கீரை:

உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும். தளர்ச்சியை போக்கும். குடல் புண்னை ஆற்றும். குடலுக்கு வலிமையை தரும். தொடர்ந்து அரைக்கீரை சாப்பிட்டால் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

சிறுகீரை:

மலச்சிக்களை குறைக்கும். தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தை குறைக்கும். உடலுக்கு ஊக்கம் அழித்து தளர்ச்சியை போக்கும்.

அகத்திக்கீரை:

உடலில் காணப்படும் அதிகஅளவு வெப்பத்தை குறைக்கும் குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம், தலைச்சுற்றல், மயக்கம், போன்றவை வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும்.

மணத்தக்காளி கீரை:

வயிற்று புண்களை போக்கும். குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.

பசலைக்கீரை

உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. தாய்பால் பெருகும்.

பாட்டி வைத்தியத்தின் அற்புதங்கள்


நாம் விஞ்ஞான உலகமான இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்தால் கூட நம்முடைய பழமை வாய்ந்த பாட்டி வைத்தியமான கை வைத்தியத்தியத்தின் பலன் பக்க விளைவின்றி நன்மை தரக்கூடிய ஒன்றாகும்.

தலை வலி குறைய:

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

வாய் புண்:

மோரில் சிறிதளவு உப்பை சோ்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வந்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

பல் வலி:

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

இருமல்:

கிராம்பை இடித்துப் பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.

வேலிப்பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

விக்கல்:

விக்கல் வரும் போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு போட்டு மெதுவாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

விடாமல் விக்கல் எடுத்தால் துளசி இலைகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

சளி:

வெற்றிலைச் சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளி குறையும்.

தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.

கழுத்துச் சுளுக்கு:

ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.

சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.

தூக்கமின்மை:

வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

மூலம்:

கண்டங்கத்திரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.

திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

நினைவாற்றல்:

பத்து பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.

வல்லாரை கீரையை தினமும் துவரம் செய்து சாப்பிட நினைவாற்றல் பெறுகும்.

ஒற்றை தலைவழி:

ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

கால் ஆணி:

அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.

மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை


தடுப்பூசி

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி அட்டவணை:

  • பிசிஜி – பிறப்பின் போது
  • ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது
  • ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள்
  • டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள்
  • டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள்
  • டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள்
  • அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9 மாதங்கள்
  • சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்
  • எம்எம்ஆர் – 15-18 மாதங்கள்
  • எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள்
  • டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24 மாதங்கள்
  • ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) – 2 ஆண்டுகள்
  • டைபாய்டு ஊசி – 3 ஆண்டுகள்
  • டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) – 5 ஆண்டுகள்
  • ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்பம் – 5 ஆண்டுகள்
  • எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) – 5 ஆ ண்டுகள்
  • வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண்டுகள்
  • வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்
  • டெட்டானஸ் – 10 ஆண்டுகள்
  • சின்னம்மை தடுப்பூசி – 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
  • டைபாய்டு வாய்வழியாக – 12 ஆண்டுகள்
  • டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) – 16 ஆண்டுகள்

குறிப்பு:

மேற்காணும் தடுப்பூசிகள் அட்ட‍வணை பகிர்ந்திருப்ப‍து விழிப்புணர்வு ஏற்படுத்த‍வே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமுன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுவரவும்

தாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம்


மருத்துவம் 1

  • வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
  • சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் கலந்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும்.
  • வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போன்று செய்து தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
  • சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதே அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் பெருகும்.
  • சதகுப்பைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
  • தேன், அமுக்கராங்கிழங்கின் ரசம், மிளகுரசம், மணத்தக்காளி ரசம் கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் தூய்மையடையும்.
  • பாலில் பூண்டு, சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகமாக சுரக்கும்.
  • நத்தைச் சூரி வேரை 10 கிராம் எடுத்து பசும்பாலில் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து வடிகட்டி இரண்டு வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.
  • முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
  • காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டிகொண்டால் தாய்பால் அதிகம் சுரக்கும்.
  • தாளிக்கீரை இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து சாறு பிழிந்து அந்த சாற்றை குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.

மருத்துவம் 2

  • பால் பெருக்கி இலையை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
  • கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
  • கோரை செடியின் கிழங்கை பச்சையாக எடுத்து நன்றாக அரைத்து சிறிது எடுத்து மார்பில் பற்று போட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
  • ஒரு கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து இரண்டு முறை பாலுடன் சேர்த்து குடித்தால் தாய்பால்அதிகரிக்கும்.
  • ஆமணக்கு இலையை நெய் தடவி நெருப்பில் வாட்டி லேசான சூட்டில் மார்பகத்தில் வைத்து கட்டி கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
  • பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் தொடர்ந்து பற்றுப் போட்டு வந்தால் தாய்பால் அதிகமாக சுரக்கும்.
  • அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
  • அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
  • அம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் சேர்த்து குடித்துவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • அகத்தி இலையைச் சமைத்து உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
  • துளசி, அதிமதுரம் ஆகியவற்றை வெந்நீர் சேர்த்து சந்தனம்போல் அரைத்து தாயின் மார்பகத்தில் தடவினால் குழந்தைகள் பால் நன்றாக அருந்தும்

மூட்டுவலிக்கு மருந்தாகும் புங்கன்

Related image

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் புங்கன் மரத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது புங்கன் மரம். இதன் இலைகள் புறவூதா கதிர்களை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. புங்கன் மரம் கோடைகாலத்தில் குளிர் நிழலை தரக்கூடியது. இதன் இலைகள், பூக்கள், பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. இது, மாதவிலக்கை முறைப்படுத்தும் தன்மை கொண்டது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ஈரலை பலப்படுத்த கூடியதாக விளங்குகிறது. தோல்நோய்களை குணப்படுத்துகிறது.

புங்கன் மரத்தின் இலைகளை பயன்படுத்தி மூட்டுவலியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 
  • புங்கன் இலைகள், 
  • சீரகம், 
  • பனங்கற்கண்டு. 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 10 முதல் 15 புங்கன் இலைகளை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவேண்டும். இதை வடிகட்டி குடித்துவர இடுப்பு வலி, மூட்டுவலியை குணமாகும். இந்த தேனீர் ஈரலை பலப்படுத்துவதுடன், காமாலை நோயை தடுக்கிறது. காய்ச்சல், சளி, இருமல் இல்லாமல் போகும். தோல்நோய்கள் குணமாகும்.

புங்கன் மரத்தின் பூக்களை பயன்படுத்தி சர்க்கரை நோய்க்கான மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 
  • புங்கன் மர பூக்கள், 
  • நெய். 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கால் ஸ்பூன் நெய் எடுக்கவும். இதனுடன், வெயிலில் காயவைத்த புங்கன் பூக்களை ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கவும். இதை ஆறவைத்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.


குதிகால் வெடிப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். 

பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும். இப்பிரச்னைக்கு மாம்பருப்பு மருந்தாகிறது.

தேவையான பொருட்கள்: 
  • மாம்பருப்பு, 
  • விளக்கெண்ணெய். 

செய்முறை: கோடை காலத்தில் எளிதாக கிடைக்கும் மாம்பழத்தின் பருப்பை எடுத்து அரைத்து விளக்கெண்ணெயில் இட்டு தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை குதிகால் வெடிப்பு இருக்கும் இடத்தில் பூசிவர வெடிப்பு குணமாகும்.

மாதவிடாயின் போது பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்..!

Related image

மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை ஃபாலோ செய்வது முக்கியம்.

1. நிறைய தண்ணீர் குடியுங்கள்!

Image result for நிறைய தண்ணீர் குடியுங்கள்!

பலர் பீரியட்ஸின் போது கழிப்பறையை பயன்படுத்துவதை எரிச்சலான ஒரு விஷயமாக நினைத்து, அந்த நாட்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்றுவலி குறையும். தண்ணீருக்கு பதில் ஜூஸ்களையும் குடிக்கலாம்.

2. கால்சியம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Image result for 2. கால்சியம் சேர்த்துக் கொள்ளுங்கள்

அந்த நாட்களில் கால்கள் இழுப்பதும், கிராம்ப்ஸ் புடித்து அடி வயிற்றில் அதிக வலியும் இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் ஆகியவற்றை சாப்பிடுங்கள். மேலும் கண்டிப்பாக ஏதேனும் கீரைகளை சேர்த்துக் கொண்டால் படிப்படியாக இந்தப் பிரச்னைகள் குணமடையும்.

3. சாக்லேட் சாப்பிடுங்கள்


நாம் மகிழ்ச்சியாகவும், டென்ஷன் இல்லாமலும் இருக்க மூளையில் செரட்டோனின் என்ற அமிலச்சுரப்பு அவசியம். டார்க் சாக்லேட்டுகளைச் சாப்பிடுவதால் செரட்டோனின் அதிக அளவு சுரக்கிறது. அதனால் மாதவிடாயினால் ஏற்படும் டென்ஷன், பதட்டம் குறைய சாக்லேட் சாப்பிடுங்கள்.

4. அதிக கொழுப்பு வேண்டாம்

Image result for அதிக கொழுப்பு வேண்டாம்

அதிக கொழுப்புள்ள வெண்ணெய், கிரீம் போன்ற உணவுகள் பெண்களின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனைத் தூண்டிவிடும். மாதவிடாய் காலத்தில் இதனால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

5. ஃபைபர் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்

Image result for fiber

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்னையால் பலர் சாப்பிடவே மாட்டார்கள். சாப்பிடாமல் இருப்பதால் கிராம்ப்ஸ்தான் அதிகம் வரும் . அதனால் உணவில் பட்டாணி, கோதுமை, ரெட் பீன்ஸ், அவகாடோ, கொய்யா, ப்ராக்கோலி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள ஃபீல் ஃப்ரீயாக உணருவீர்கள்.

6. வைட்டமின்களை தவிர்க்காதீர்கள்

Image result for வைட்டமின்

வைட்டமின் பி6 நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’ – ஐ குறைக்கிறது. வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கிறது. மிகவும் முக்கியமாக, மாதவிடாய்க்கு முன்பு மேற்கூறிய வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கும் ஆரஞ்சு, நட்ஸ் வகைகள், வாழைப்பழம், மீன், தர்பூசணி, கீரை போன்றவற்றை சாப்பிடுங்கள். வலியில்லாத மாதவிடாய்க்கு தயாராக இந்த வைட்டமின்கள் தேவை.

ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!

Image result for பெண்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டிய 10 ஆரோக்கிய விதிகள்

1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

3. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

4. அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

5. 200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு, 8. 100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு ஆகிய கலவைகளின் சாறுகளை சம அளவு எடுத்து தினமும் பருக வேண்டும்.

6. வாசனை எண்ணெய்யால் தலைக்கு ஒத்தடம் தரலாம். தேய்த்து விடலாம்.

7. பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில் தேய்த்து குளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

8. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

பெண்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டிய 10 ஆரோக்கிய விதிகள்


வேலைக்குச் செல்லும் பெண்கள் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு பறக்கிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இப்படிப்பட்ட பரபரப்புகளில் ஆழ்ந்திருக்கிற பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை என்பது வருத்தமான ஒன்றுதான்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களானாலும் சரி, வீட்டை நிர்வகிக்கும் பெண்களானாலும் சரி, கீழே தரப்பட்டுள்ள 10 ஆரோக்கிய விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

1. கலோரிகளில் கவனம்!

Image result for 1. கலோரிகளில் கவனம்!

ஒருவருக்குச் சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை. இது, ஒவ்வொருவரின் பி.எம்.ஐ (BMI) அளவைப்பொருத்து மாறுபடும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 1600 முதல் 1800 கலோரிகள் தேவை. வயது அதிகமாகும்போது, இந்த அளவில் ஆண்டுக்கு 7 கலோரிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, பி.எம்.ஐ அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற உணவுப்பட்டியலைத் தயாரித்து சாப்பிட வேண்டும்.

2. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்!


வீட்டு வேலை, அலுவலக வேலை என பெண்கள் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தங்கள் உடல்நலனைக் கருத்திக்கொள்வதே இல்லை. குறிப்பாக, உடற்பயிற்சி… இல்லவே இல்லை. கட்டாயம் பெண்கள் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு செய்யலாம். நடுத்தர வயதுப் பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடற்பயிற்சிகள் செய்வதால் உடல் எடைகூடுதல், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

3. உடல் பரிசோதனை முக்கியம்!

Image result for உடல் பரிசோதனை

நடுத்தர வயதைத் தொட்ட பெண்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். குறிப்பாக மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு, வேறுவிதமான மாற்றங்கள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. பிடித்தமான டயட்டைத் தேர்ந்தெடுங்கள்!

Related image

நடுத்தர வயதுப் பெண்கள், தங்களுக்கு வயதாகிவிட்டது என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அதனால், அழகு, ஆரோக்கியம் குறித்துப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஆரோக்கியமாக இருந்தாலே அழகுதான். சரியான வயதில் உணவு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று தகுந்த டயட் உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம், அழகாகவும் இருக்கலாம்.

5. அதிகநேரம் உட்கார வேண்டாம்!

Image result for டயட்டைத் தேர்ந்தெடுங்கள்!

அதிக நேரம் உட்காருவதை தவிர்ப்பது நல்லது. அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் சர்க்கரைநோய், இதயநோய்கள் போன்ற மிக விபரீதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் குறிப்பிட்ட இடைவெளியில் எழுந்து நடக்கலாம். பிடித்த வேறுவிதமான வேலைகளைச் செய்யலாம்.


6. எலும்புகள் பத்திரம்!

Image result for டயட்டைத் தேர்ந்தெடுங்கள்!

ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்புண்டு. இதை `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்கிறார்கள். இதன் காரணமாக முதுகுவலி, எலும்புகள் உடைவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உணவில் கீரைகளை அதிகமாக சேர்த்துக்கொள்வதாலும் உடற்பயிற்சிகள் செய்வதாலும் எலும்புகள் வலுவாகும்.

7. ஹார்மோன் சோதனை!

Image result for ஹார்மோன் சோதனை!

இரவுநேரத்தில் போதிய அளவுக்குத் தூக்கம் இருந்தாலே ஹார்மோன் (Harmone) குறைபாடுகள் ஏற்படாது என்கிறார்கள் மருத்துவர்கள். எந்தத் தொந்தரவும் இல்லாமல் உங்கள் உடல் எவ்வளவு தூக்கம் கேட்கிறதோ அந்த அளவுக்கு நிம்மதியாகத் தூங்கி எழுந்தாலே உங்கள் உடலும், மூளையும் உற்சாகமாக இருக்கும். ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கின்றனவா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதித்துக்கொள்வது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துகொள்ளவேண்டும்.

8. தண்ணீர் குடியுங்கள்!


காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து, உடலும், மூளையும் புத்துணர்ச்சியடையச் செய்ய இது உதவும். தாகம் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள்.

9. சருமம் கவனம்!

Image result for சருமம் கவனம்!

30 வயதைக் கடக்கும் பெண்களின் சரும நிறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். வயது அதிகமாக அதிகமாக தோலில் எண்ணெய்ச்சுரப்பு குறைந்துகொண்டே வரும். அதனால், தோல் வறண்டு போவது, சுருங்குவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, கண்களுக்கு அருகிலும், முகத்திலும் (Crow’s Feet Area) சுருக்கங்கள் ஏற்படும். தோல் செல்களின் உற்பத்தி மந்தமாகிவிடும் . வருடத்துக்கு ஒரு முறையாவது தோல் நோய் நிபுணரிடம் சோதனை செய்துகொள்வது நல்லது.

10. திட்டமிட்டு செலவு செய்யுங்கள்!

Image result for திட்டமிட்டு செலவு செய்யுங்கள்!

‘குடும்பத்தில் ஏற்படும் பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகள், உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, உடல் எடை கூடுவது போன்ற பிரச்னைகள் வரக்கூடும். வருமானத்துக்கு தகுந்தபடி, திட்டமிட்டுச் செலவு செய்தால் நிம்மதியாக இருக்கலாம். மன உளைச்சலையும் தவிர்க்கலாம்.


Friday, May 18, 2018

எலும்பு தேய்மானம் ஆவதை தடுக்கும் வழிமுறைகள்

Image result for எலும்பு

பாதுகாப்பு முறை: 

  • சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும். எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. 

  • இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும். ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும். 

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும். அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும். 

  • மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும். ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

வ‌யி‌று கோளாறு‌க்கு சோ‌ற்று‌க் க‌ற்றாழை

Image result for சோ‌ற்று‌க் க‌ற்றாழை

சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறு‌ந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை,குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.

இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும். இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.

எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.

நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை பாக்குற ஆளா நீங்க?... அடடா! அப்போ நீங்க இத படிச்சே ஆகணுமே..

Image result for நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை பாக்குற ஆளா நீங்

மனித உடலின் மிகவும் உன்னதமான உறுப்பு மூளை. மனித மூளையின் செயல்பாடுகள் குறித்தும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் மூளை அனைத்து சமயங்களிலும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் உறங்கும் பொழுது கூட மூளை செயல்பாட்டில்தான் உள்ளது. 

இன்று இருக்கும் MRI மாதிரியான Nural Imagining Technic's மூலமாக நடப்பது , பேசுவது போன்ற சிறு செயல்களுக்கு கூட மூளையின் பெரும்பாலான பகுதியைப் பயன்படுத்துவதாக நாம் அறிய முடிகிறது. ஒரு சமயத்தில் 1-16% மூளை இயங்கும். நம் எந்த செயல்கள் செய்கிறோமோ அந்த பகுதியை மட்டும் நம் மூளை இயக்கும். இது நம் மூளை திறன்பட செயல்படுவதைக் குறிக்கிறது. நினைவாற்றல் தொடர்பான பணிகளின் செயல்திறனை நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் குறைகிறது

உட்கார்ந்து வேலை செய்தல் 

நாம் அதிக நேரம் உட்கார்ந்திருக்கும் பொழுது மூளையின் செயல்பாட்டை பற்றி ஆராய்ச்சியாளர்கள் சில ஆராச்சியை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் மூலமாக மனிதனின் முளையின் நினைவாற்றல் திறன் மாறுபடுவதாகக் கண்டுபிடித்துள்ளனர் .இந்த கண்டுபிடிப்பை 100% உலகில் உல்ல அனைத்து ஆராய்ச்சி மையங்களாலும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. 

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் 

  • சக்கரை நோய்(Type 2 Diabetes) ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 
  • கெட்ட கொலெஸ்ட்ரால் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் . 
  • நாம் உட்காந்திருக்கும் பொழுது தலையை குனியும்பொழுது oxygen அளவும் நுரையீரலுக்கு செல்வது குறைகிறது. அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் .
  • நாம் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்த்திருப்பதால் செய்யும் வேளையில் கவனக்குறைவு அதிகரிக்கும் . 
  • உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அகிகம்
கடைபிடிக்கவேண்டிய பழக்கங்கள்:

1. இரண்டு மணி நேரத்துக்கு இடையில் சிறிது நேரம் நடைபயணம் மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

2. எப்பொழுதும் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது சிறிது உடற்பயிசியையும், உயிர்ச்சக்தியையும் அதிகப்படுத்தும். 

3. நின்றும் அமர்ந்தும் வேலையைத் தொடரும் மேஜைகளை ( sitting and standing desk ) பயன்படுத்தலாம்.

4. அதிகமாக தண்ணீர் குடிப்பது நம் அலுவலகச் சூழலில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்க்க உதவும். நம் உடல் உற்சாகத்துடன் செயல்படும்பொழுது நம் மூளை திறன்பட செயல்பட வழி செய்கிறது.


Wednesday, May 16, 2018

மருதாணி மருத்துவ குணங்கள்


Image result for maruthani
  • கல்லீரல், மண்ணீரல் பிரச்சனைகள் தீர மருதாணிச் செடியின் பட்டைகளை நீரில் ஊறவைத்து பின்பு அந்த நீருடன் தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.
  • இளநரை நீங்க மருதாணி இலைச் சாறு (2 லிட்டர்), நல்லெண்ணெய் (2லிட்டர்), பசும்பால் (2லிட்டர்), மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வைத்துக்கொண்டு தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
  • பித்தவெடிப்பு நீங்க மருதாணி இலையை தயிர் சேர்த்து அரைத்து, இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிகொண்டு வந்தால் விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
  • நன்றாகத் தூக்கம் வர மருதாணிப் பூக்களைப் பறித்து, தலையணையின் கீழ் வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
  • தேமல், படை குணமாக மருதாணி இலைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேமல், படை மீது இரவில் தடவி காலையில் குளித்து வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
  • முடி கருப்பாக மாற மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துவந்தால் முடி கறுப்பாக மாறும்..

நாம் சாப்பிடும் உணவில் தினம் ஒரு முட்டை நல்லதா....?


மனிதர்கள் சாப்பிடும் விருப்பமான மற்றும் சத்தான உணவுகளில் முட்டையும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில் புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

முட்டையில் உள்ள லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சனை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.

உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.

சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம்.

முகம் பொலிவு பெற இந்த முறையை பயன்படுத்தி பாருங்க...!


ஆரஞ்சு பழச்சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து பயத்தாமாவில் முகத்தை கழுவி வர நல்ல முக அழகைப் பெறலாம்.

தக்காளியை நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதனை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவை செய்ய முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கி நல்ல பொலிவை பெறும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் போய்விடும்.

நல்ல கெட்டி தயிரை எடுத்து முகத்தில் பூசிவந்தால் முகம் நல்ல மென்மையடையும். பாலில் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வர முகம் பொலிவு பெறும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். பாலாடை, தர்பூசணி பழச்சாறு, வெள்ளரிக்காய் சாறு இவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் பூசி நன்றாக ஊறவைத்து கழுவி வர முகம் பளிச்சென்று மாறும்.

பலவீனமாக உள்ள தலைமுடியை வலிமையாக்கும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்....!


பெண்கள் முடி உதிர்வதால் கவலையால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் மயிர்கால்களை வலிமையாக்கும் சில ஹேர் பேக்குகளை வாரம் ஒருமுறை போட்டு வருவதன் மூலம் பலவீனமாகி உதிரும் முடியை வலிமையாக்கலாம். அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு, குறிப்பாக புரோட்டீன் நிறைந்த பொருட்களைக் கொண்டு ஹேர் பேக் போட்டு வந்தால், நிச்சயம் தலைமுடியின் வலிமையை அதிகரிக்க முடியும்.

முடி உதிர்வு போன்ற கவலையால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் மயிர்கால்களை வலிமையாக்கும் சில ஹேர் பேக்குகளை வாரம் ஒருமுறை போட்டு வருவதன் மூலம் பலவீனமாகி உதிரும் முடியை வலிமையாக்கலாம்.

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதிலும் முட்டையின் வெள்ளைக்கருவில் தான் அதிகம் உள்ளது. ஆகவே முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் அதில் உள்ள புரோட்டீன், மயிர்கால்களை வலிமையாக்கும்.


தலைமுடியை நீரில் அலசிய பின், முடியில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து, பின் பால் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், மயிர்கால்களின் வலிமைக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முடி வலிமையடையும்.

ஹென்னா தலையில் உள்ள நரைமுடியை கருமையாக்க உதவுவதோடு, அது முடியின் அடர்த்தியையும், வலிமையையும் அதிகரிக்கும். ஆகவே மாதத்திற்கு ஒருமுறை இரவில் படுக்கும் முன் ஹென்னா பொடியை நீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும்.